Rock Fort Times
Online News

கடலில் கச்சா எண்ணெய் – நாகை மீனவா்கள் போராட்டம்

நாகை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி.எனும் பொதுத்துறை நிறுவனம் மூலம் காவிரிப் படுகையில் ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல்., ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.பி.சி.எல். ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல்., தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில நாகூா், பட்டினச்சேரி கடல் பகுதியில் செல்லும் குழாயில், உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்தது.இதனால் அப்பகுதியில் 500 மீட்டர் துாரம் கடல் நீர் கருப்பாக மாறியது. கச்சா எண்ணெய் வாடை கிராமம் முழுவதும் பரவியதால் மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த சி.பி.சி.எல். அதிகாரிகள், வருவாய் துறை, காவல்துறையினாிடம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால், குழாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோாிக்கை வைத்தனா். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். உடைந்த குழாய்களை சீா் செய்ய வந்த ஊழியர்களை தடுத்து தாக்க முயற்சித்ததால் அங்கு பதற்றம். ஏற்பட்டது. மாவட்ட துணை ஆட்சியா் பானோத்ம்ருகேந்தர் லால், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்குப் பின் குழாய் உடைப்பை சீர் செய்ய மீனவர்கள் அனுமதித்ததை அடுத்து, குழாய் சீரமைப்பு பணியில் சி.பி.சி.எல்., ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்