தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், சேர்மன் துரைராஜ், கருணாநிதி, டோல்கேட் சுப்பிரமணி, துர்கா தேவி, தொ.மு.ச.குணசேகர், கண்ணன், செவந்தி லிங்கம், மோகன்தாஸ், நாகராஜ், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், கலைச்செல்வி, கவிதா, கருமண்டபம் சுரேஷ், கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.