அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் எம். அருணகிரி, ஒன்றிய செயலாளர்கள், எஸ். கே.டி.கார்த்திக், பகுதி செயலாளர் ஏ. தண்டபாணி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் என். பொன்னுச்சாமி, மாவட்ட அமைப்பு சாரா உறுப்பினர் அணி செயலாளர் கே. எஸ். பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என். கார்த்திக், வர்த்தக அணி செயலாளர் எஸ். ராஜமணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம். சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் பி.சாந்தி, மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் , பகுதி கழக, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ் , சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துகருப்பன், செல்வராஜ், நடராஜ், கோபால் , ஆமூர்.ஜெயராமன், முன்னாள் அரசு வழக்கறிஞா் வெங்கடேசன், பொன்முருகன், சிவா, ஸ்ரீரங்கம் ரவிசங்கர், நடேசன், சமயபுரம் ராமு, எட்டறை அன்பரசு, முசிறி மைக்கேல், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.