Rock Fort Times
Online News

திருவெறும்பூர் தொகுதியில் ரூ.7 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் இரண்டாவது வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வார்டு மாமன்ற உறுப்பினரும், மண்டலம் மூன்றின் தலைவருமான மு.மதிவாணன் தலைமை தாங்கினார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ரமேஷ் குமார், பொறியாளர் ஜெகஜீவராமன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்