மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், 2016-ம் ஆண்டு வறட்சி காலத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 22 நாட்களாக திருச்சி அண்ணா சிலை முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 23-வது நாளாக கர்நாடக முன்னாள் முதல்வர், பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று பேசியதை கண்டித்து இன்று ( 18.08.2023 ) காலை விவசாயிகள் திருச்சி முக்கொம்பு சென்றனர். அங்கு அவர்கள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.