Rock Fort Times
Online News

கஞ்சா புகைத்து விட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட 6 இளைஞர்கள் கைது- கஞ்சா வியாபாரிகளுக்கு வலை…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களை குறி வைத்து ஒரு கும்பல் இதனை அரங்கேற்றி வருகிறது. இதனால், இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், 8 இளைஞர்கள் கஞ்சா புகைத்து விட்டு மயங்கி விழுந்து கிடப்பது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த இளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்நிலையில், இதுதொடர்பாக பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சிவகுமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 பேரை பழனி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, அதனை புகைக்கப் பயன்படுத்திய பாங் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன், மதி மற்றும் கஞ்சா விற்பனை செய்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்