Rock Fort Times
Online News

தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை- பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்தனர்…!

தலைநகர் டெல்லியில் பூட்டிய வீட்டிற்குள் 5 பேர்  சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் வருமாறு:-  புது டெல்லியில் உள்ள வசந்த்குஞ்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது.  இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.   தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்,  கதவை தட்டினர். ஆனால், நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படாததால் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டிற்குள்  5 பேர் சடலமாக கிடந்தனர். அருகே தூக்க மாத்திரைகள் சிதறி கிடந்தன. அதனால், அவர்கள்  5 பேரும் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது. பின்னர், அவர்கள் 5 பேர் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தது  ஹீராலால்  சர்மா (46)என்பதும், மற்றவர்கள் அவரது மகள்களான நீத்து (26), நிக்கி (24),  நீரு (23), நிதி( 20) என்பது தெரிய வந்தது. அவர்களில் இரண்டு பேர் மாற்றுத் திறனாளிகள்.  ஹீராலால் மனைவி கடந்தாண்டு மரணம் அடைந்ததால் அன்று முதல் 5 பேரும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்