கோவை ஒண்டிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலு. இவரது மகன் ரெக்ஸ் கிறிஸ்டோ (வயது 34). இவர் திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தார். பின்னர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த அறை க்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள் கண்டோன்மென்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது தாய் தெரசா மரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.