மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்…!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியை சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் 494 கிராம் எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.43 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.