Rock Fort Times
Online News

திருச்சி, தீரன்நகர் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 15 பவுன் நகைகள் திருட்டு…!

திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கருமண்டபம் அடுத்து தீரன் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள கோரையாறு அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பை சுற்றி ஆறு அடி உயரத்தில் கம்பி வேலியுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு ள்ளது. இங்கு வரிசையாக அமைந்துள்ள வீடுகளில் முத்துசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தனர். இந்தநிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்குள் நைசாக நுழைந்த மர்ம ஆசாமிகள் முத்துசாமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகளையும், மகேந்திரன் வீட்டில் 3 பவுன் நகைகளையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்