திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி ( வயது 47). லாரி டிரைவர். இதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (32). பொக்லின் எந்திர டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று மாலை கண்ணனூர் சென்று விட்டு இரவு பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு கரூர் செல்வதற்காக சென்ற லாரி துறையூர்-முசிறி செல்லும் சாலையில் கண்ணனூர் பாளையத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பழனியாண்டி, நடராஜன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.