நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் திமுக தற்போதையிலிருந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2 மாவட்ட செயலாளர்களை திமுக அதிரடியாக மாற்றி உள்ளது. அந்தவகையில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆர்.டி.சேகர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த குன்னம் ராஜேந்திரனுக்கு பதில் வீ.ஜெகதீசன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.