திருச்சி பாலக்கரை போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பொது கழிவறை அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில், மணிகண்டன் மீது 11 வழக்குகளும், விக்னேஷ் மீது ஒரு வழக்கும் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.