Rock Fort Times
Online News

துறையூர் அருகே பயணிகள் ஆட்டோ- கார் மோதிக் கொண்டதில் 16 பேர் காயம்…!

திருச்சி மாவட்டம்  துறையூர் மூவானுர் அருகே உள்ள கண்ணுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலில்  காதணி விழா ஒன்று நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்வதற்காக செங்காட்டுப்பட்டியில் இருந்து உறவினர்கள் சிலர் பயணிகள் ஆட்டோ ஒன்றில் கண்ணுக்குளம் நோக்கி சென்று  கொண்டிருந்தனர்.  அந்த ஆட்டோ பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்