திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பொறுப்பில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், பணி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி, இந்த காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலா (வயது 45) என்பவருக்கு இரவு ரோந்து பணி செல்லுமாறு சப்- இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் பணித்தாா்.
அதற்கு கலா, இரவு ரோந்து பணிக்கு செல்ல முடியாது என கூறி சப்- இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசரை திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சி எஸ்பி. வீ. வருண்குமார் ஐபிஎஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பெண் காவலர் கலாவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.