Rock Fort Times
Online News

விமானத்தில் இப்படி கூட தங்கத்தை கடத்துவார்களா?- வசமாக சிக்கினார் பயணி…!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம் வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்
சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் தங்கத்தை உருக்கி கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் உருண்டை வடிவில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 194 கிராம் ஆகும். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்