விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை ஒட்டி அங்கு அடுத்த மாதம் ( ஜூலை) 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், பா.ம.க. மாநில துணை தலைவராக உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Comments are closed.