திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சிவராத்திாி திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை திருவிழா நடைப்பெற்றது.விழாவிற்கு முன்னதாக கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க அங்காளம்மன் சிலை மற்றும் பூ கரக ஊர்வலம் திருவீதி உலா வந்து பாலாற்றை வந்தடைந்தது.பின்னர் பாலாற்றில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெற்ற பின்னர் அங்கு வடிவமைக்கப்பட்டிருந்த அசூரனின் சிலையின் கண் முட்டைகளை எடுக்க பக்தர்கள், மற்றும் இளைஞர்கள் அலைமோதினர்.இந்த விழாவினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மேலும் இந்த விழாவிற்கு பாதுகாப்பு பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுப்படுத்தப்பட்டனர



Comments are closed, but trackbacks and pingbacks are open.