Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் தேர்வு!

திருச்சி மாவட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக உறையூர் ராமலிங்கம் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளும், கீழ்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:

தலைவர், கோ.சங்கர், துணைத்தலைவர் ஆர். கோபிநாத், செயலாளர் ஜெ. சிவபாலன், துணைச்செயலாளர் வி. தீனதயாளன், பொருளாளர் ஒ.முத்துவேல், நிர்வாக கமிட்டித் தலைவர் என். கோபிநாத், உறுப்பினர்கள் வி.பொன்மொழிச் செல்வன், ஏ. சேகர், கே.முத்துப்பால், எம்.குசன், ஏ.கார்த்திக், ஆலோசனை கமிட்டித் தலைவர் வி.எம். செல்வராஜ், உறுப்பினர்கள் கே. மன்னர் மன்னன், ஜி. முத்துலிங்கம், டி. சத்தியமூர்த்தி, கே. பி..சக்திவேல், எஸ். பிரேம்குமார், வி. லூர்து, கே.எம். சுந்தர வடிவேலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆசோசனைக் கூட்டம் நடத்தப்படும், தியாகி ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினமான வருகின்ற செப்டம்பர் மாதம் 11 அன்று நினைவு தினம் கடைபிடிப்பதென்றும், அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 9-ம் தேதி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்