Rock Fort Times
Online News

திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு! சலவைத்தொழிலாளர்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால்,  கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்., கொள்ளிடம் ஆறு 4 லட்சம் கன அடி நீரை தாங்கும் திறன் கொண்டது. வெள்ள காலங்களில் இதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். தற்போது 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளது. இது வெள்ள அபாயம் இல்லை. இருந்தபோதும் கரையோரம் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்