Rock Fort Times
Online News

சாமி கும்பிட விளக்கு ஏற்றிய போது விபரீதம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி…

திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள விளக்கை ஏற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது. பின்னர்,மள மள வென்று உடல் முழுவதும் தீ பரவியது. இதில், பலத்த தீ காயம் அடைந்த காமாட்சியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்