அரியலூர் கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்ஆப் மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பொ.ரத்தினசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இந்நிலையில், சில நபர்களிடமிருந்து எனது புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்து +84378845818 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து குறுஞ்செய்தி மூலமாக அரசு உயர் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் பெயரில் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. இவ்வாறான பொய்யான அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும், மேற்கண்ட எண்களிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ ஏதேனும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ரமண சரஸ்வதி புகைப்படத்தை பயன்படுத்தியும் இதேபோல ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது
Comments are closed.