Rock Fort Times
Online News

ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டவர் கைது…

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் (23). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து வீடியோ பதிவிட்டு வந்தார். மேலும், நேற்று காலை எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாளுடன் சுற்றித்திரிந்தமுகேசை பிடித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து கைது செய்தனர்.இதுபோன்று ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்