Rock Fort Times
Online News

திருச்சியில் மாநகராட்சி ஊழியரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய “கஞ்சா குடிக்கிகள்”காவல்துறை அலட்சியத்தால் அரங்கேறியது அசம்பாவிதம் ! (வீடியோ இணைப்பு)

திருச்சி உழவர் சந்தை அருகேயுள்ள குழுமிக்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் நுண் உர செயலாக்க மையம் இயங்கி வருகிறது. இதில் ஒப்பந்த ஊழியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கமான பணியை முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு திரும்பும் வழியில், அப்பகுதியில் கஞ்சா போதையில் இருந்த நபர்கள் இவரை மறித்து பீடி கேட்டுள்ளனர். இவர் தன்னிடம் இல்லை என்று சொன்னதும், போதையில் ஒப்பந்த ஊழியர் செல்வத்தை கண்மூடித்தனமாக 6 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. உயிருக்கு பயந்து நுண் உர செயலாக்க மையத்திற்குள் அவர் ஓடியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கொலைவெறி கும்பல், அவரை பின் தொடர்ந்து அருகில் இருந்த கடப்பாரை, மண்வெட்டி ஆகிய ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொடூர சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கும்போது., ‘ சமீப காலமாக திருச்சி தென்னூர், ஆழ்வார் தோப்பு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் போதை கும்பலின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. சாலையோரங்களில் நிற்கும் கார்களை பார்களாக்கி சரக்கு போதையில் சல்லாமிடுகின்றனர்.சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகளிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் . இரவு நேரங்களில் பெண்கள் உள்ளிட்ட யாருமே சாலையில் நடந்து செல்ல கூட முடியாத சூழல் நிலவி வருகிறது. இது குறித்து போலீசாரிடம் எத்தனையோ முறை முறையிட்டும் கூட, இரவு நேர ரோந்து பணியை கூட தீவிர படுத்தவில்லை. காவல்துறையின் அலட்சியத்தாலேயே மாநகராட்சி ஊழியர் மீது தற்போது இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளது.இனிமேலாவது காவல்துறை சுதாரித்து நடவடிக்கையை தீவிர படுத்தினால் மட்டுமே குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் ‘ என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்