உலக யோகா தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மனைவியுடன் கலந்து கொண்டு யோகா செய்தார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், யோகா மைய இயக்குனர் வெங்கடாஜலபதி, உடற்கல்வித்துறை இயக்குனர் செந்தில் வேலவன், கவர்னர் ஆலோசகர் திருஞானசம்மந்தம், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.