Rock Fort Times
Online News

சென்னை திரும்பும் மக்களின் நலன் கருதி திருச்சி, மதுரையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்…!

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மதுரை , திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
ரயில் எண் : 06008 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் மெமு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியிலிருந்து இன்று 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் 6.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதேபோன்று ரயில் எண் 06100 மதுரை – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் மெமு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மதுரை ஜங்ஷனிலிருந்து இன்று 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7-15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3-20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்