Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, திருச்சியில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தங்க கடத்தல் மாஃபியா கும்பல், அதிகளவிலான தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.தினம்தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருகிறது.அதிகாரிகள் என்னதான் கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணித்து வந்தாலும் தங்க கடத்தல் குறைந்தபாடில்லை.  இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று ( ஜூலை 5ம்தேதி ) காலை திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம்  திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தான் முழங்காலில் அணிந்திருந்த knee cap- ல்  தங்கத்தை தகடு வடிவில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடத்திவரப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூபாய் 1. 16 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்