Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.51 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.  அதில், செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது  ஒரு பயணியின்  உடைமையில் 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மற்றும் சவுதி அரேபியா ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்