Rock Fort Times
Online News

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை- பல்லடத்தில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்…!

பிரதமர் நரேந்திர மோடி இன்றும்(27-02-2024) நாளையும் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய “என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக இன்று மதியம் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சொல்கிறார். மதியம் 2.45 மணியளவில் மாதப்பூர் வந்தடையும் அவர், ஒரு மணிநேரம் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு அங்கிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். மதுரையில் உள்ள டி.வி.எஸ்.லட்சுமி பள்ளியில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் பார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார். அப்போது, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை (28ம் தேதி) காலை தூத்துக்குடிக்குச் சென்று பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் . அங்கிருந்து நெல்லை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் செல்ல உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூர் ,மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்