Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், தா.பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி,  பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய முசிறி கோட்ட செயற்பொறியாளர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.  இதேபோல,  திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (24- ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், மலைக்கோயில், தொழிற்பேட்டை, டி.நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமா நகர், சோழமாதேவி, கக்கன் காலனி, பர்மா காலனி, நேருநகர், அண்ணா நகர், நவல்பட்டு, போலீஸ் காலனி, 100 அடிரோடு, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்