Rock Fort Times
Online News

சோமரசம்பேட்டை, அதவத்தூர், துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம், அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (05-11-2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, முத்து பிளாட், சரவணபுரம், பள்ளக்காடு, வாசனசிட்டி, முள்ளிக் கரும்பூர், புங்கனூர், அல்லித்துறை, சுண்ணாம்புக்காரன் பட்டி, சாந்தாபுரம், மான்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்த நகர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர்,  கீழ்வயலூர் ஆகிய பகுதிகளில் நாளை  காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல  மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக்கோசிக் குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன் பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்