திருச்சி, புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்டரி விற்ற கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் உறையூரை சேர்ந்த தனபால் (வயது 54), சரவணன் (44) என்பதும், அவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம், துண்டு சீட்டில் எழுதப்பட்ட லாட்டரி எண்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய விவேக், சிவா ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
Comments are closed.