திருச்சியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை: விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மீட்பு-வாலிபர் கைது…!
திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்- இன்ஸ்பெக்டர் நளினி ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மேலப்புதூர் பகுதியில் வணிக வளாகத்தில் உள்ள மசாஜ் சென்டருக்கு சில ஆண்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். உடனே,
போலீசார் அந்த மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது .இது தொடர்பாக திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார்(23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் செல்வம் உள்ளிட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சோதனையின்போது 2 செல்போன்கள், ஐந்தாயிரம் பணம் மற்றும் பணம் செலுத்தக்கூடிய ஸ்வைப் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.