பொம்மைக்கு பயன்படுத்தும் பேட்டரியை விழுங்கிய ஒரு வயது குழந்தை…
எண்டோஸ்கோபி மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அகற்றம்...
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது ஒரு வயது குழந்தை விளையாட்டு பொம்மைகளுக்கு பொருத்தும் பேட்டரியை கடந்த 21-ந்தேதி விழுங்கிவிட்டது. உடனே அவரது உறவினர்கள குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறுநாள் 22-ந்தேதி அரசு மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் மருத்துவர்கள் ஆர்.ஆர்.கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் எண்டோஸ்கோபி மூலம் நீண்ட நேரம் போராடி குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கி இருந்த பேட்டரியை அகற்றினர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டது. குழந்தையை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு பாராட்டினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.