Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்த முதியவர் சாவு…

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மது (63).இவர் திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள பேப்பர் கடையில் சுமைதொக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இவரது மனைவி பஞ்சவர்ணம் எண்ணெய் சட்டியில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவர் எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்