Rock Fort Times
Online News

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் மனு தாக்கல்…!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுகவின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து நேற்று வேட்புமனுை தாக்கல் செய்தார். இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல,  ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் மூன்று பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்  ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக களம் காண்பதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் மாற்றி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்