ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் வந்தார். பின்னர் அவர் அந்த வழியாக வந்த ரயில் முன்பு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் வெண்ணிலா (வயது 35) என்பதும், இவர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.