திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்பு…!
திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜவஹர் அலி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, மாவட்ட அணி செயலாளர்கள் இலக்கிய அணி பாலாஜி ,கலிலுல் ரகுமான், அப்பாஸ், இலியாஸ், வெங்கட் பிரபு, பகுதிச் செயலாளர்கள் ரோஜர், என்.எஸ். பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, சுரேஷ் குப்தா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, கலைவாணன், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பாலக்கரை சதர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், கௌசல்யா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வட்டச் செயலாளர்கள் சையது ரபி, டைமன் தாமோதரன், வைத்திலிங்கம், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி, எடத்தெரு பாபு,ஜெயக்குமார், வசந்தம் செல்வமணி, நிர்வாகிகள் அப்பா குட்டி, பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அக்பர் அலி ,மார்க்கெட் பிரகாஷ், தில்லை விசுவா, கல்லுக்குழி முருகன், ரமணிலால், கோழிக்கடை பாலு, பூக்கடை முத்துக்குமார், செல்லப்பா, கிராப்பட்டி கமலஹாசன், எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், ரஜினிகாந்த், உடையான்பட்டி செல்வம், தென்னூர் ஷாஜகான், கே.பி.ராமநாதன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பாலக்கரை பகுதி மாணவரணி செயலாளர் மார்க்கெட் பிரகாஷ் நன்றி கூறினார்.
Comments are closed.