Rock Fort Times
Online News

கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்பு...

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், திறக்கப்படும் குறைந்த தண்ணீரையும் தடுக்கும் பாஜக அரசு மற்றும் அந்த மாநில . கன்னட அமைப்புகளை கண்டித்தும் திருச்சி, தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ( 11.10.2023 ) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன், கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். திமுக பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், தமால் முஸ்தபா, நாகராஜன் ,காஜாமலை விஜய்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி ஜெயா நிர்மலா, முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், துபேல் அகமது மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் செங்குட்டுவன், லிலாவேலு , சந்திரமோகன், தர்மராஜ் ,மோகன், பொற்கொடி, ராஜ்முகமது, ரமேஷ், சின்னஅடைக்கன், பழநியாண்டி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி படுகை கூட்டு இயக்க மாவட்ட செயலாளர் சிவசூரியன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்