திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டியில் கூலி வேலை செய்வதற்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த திலீப்குமார் (வயது 43) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். பின்னர் அவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோல்டன்சிங் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை கைது செய்தனர். சிறுமியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.