Rock Fort Times
Online News

திருச்சியில் கட்டிட தொழிலாளியை கொலை செய்தவர் கைது: பரபரப்பு வாக்குமூலம்…

திருச்சி உறையூரை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார். இவர் குடும்பத்தகராறில் மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபோதையில் உறையூர் பகுதியில் எங்காவது சாலை ஒரத்தில் கடை வராண்டாக்களில் படுத்து உறங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர், ராமலிங்க நகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் கல்லை எடுத்து குணசேகர் தலையில் அடித்ததில் மண்டை உடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தென்னூர் பகுதியை சேர்ந்த சரவணன் (52)என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சரவணன் மது குடித்த போது அருகில் இருந்த குணசேகர் மது கேட்டுள்ளார். அதற்கு சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து குணசேகரன் மது கேட்கவே ஆத்திரமடைந்த சரவணன் குணசேகரனை கல்லால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்