மதுரை மாவட்டம் சொக்கலிங்க நகர் 7வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 53). இவர் திருச்சி உறையூர் பகுதியில் திருவடி தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று இரவு லாட்ஜ் அறையில் தூங்கிய ராமகிருஷ்ணன் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.இதனால் அவருடைய அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.இதனை பார்த்து சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் சதீஷ்குமார் அறைக்கு சென்ற போது அங்கு துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு ராமகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அவர் விஷம் குடித்து இறந்தது தெரிய வந்தது.
பின்னர், ராமகிருஷ்ணனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் என்ன காரணத்துக்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.