Rock Fort Times
Online News

சிகிச்சைக்கு வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அரசு டாக்டர் கைது…!

நெல்லை மாவட்டம், பணகுடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணகுடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 48) டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மருத்துவமனைக்கு 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது டாக்டர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, டாக்டர் பாலச்சந்தரை கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லை மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்