திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. தொடர் கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல், ஆத்தூர் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாகச் செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed, but trackbacks and pingbacks are open.