சென்னை பெருநநகர காவல் துறையின் 109வது ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் டிஜிபியாக இருந்த சந்தீப் ரத்தோர், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.