இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பபதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது. இந்நிலையில்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.