தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கரை காஜாப்பேட்டை கீழ கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில், ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில், அங்கு தலா 45 கிலோ எடையுள்ள 24 முட்டைகளில், சுமார் 1080 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் த. தனலட்சுமி (40) என்பதும், அவர் அருகில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து சிறிது சிறிதாக அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு தயாரிக்கவும், மற்றும் மாட்டு தீவனங்கள் தயாரிக்கவும் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.