Rock Fort Times
Online News

சென்னை – திருச்சி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றம்…

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு வந்தடையும். மேலும் திருச்சிராப்பள்ளியில் இருந்து எழும்பூருக்கு சோழன் விரைவு ரயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக, காலை 11 மணிக்கு புறப்படும் என்றும் எழும்பூருக்கு மாலை 6.15 மணிக்கு சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்