Rock Fort Times
Online News

திருச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஓ.பி.சி அணி சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று ( 11.12.2023 ) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த், நிர்வாகிகள் புரட்சிக் கவிதாசன் இல.கண்ணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகிகள் காளீஸ்வரன், ஒண்டிமுத்து, தண்டபாணி, செல்வதுரை, பாலன்,ஜெய் கர்ணா, எஸ்.பி சரவணன், ஓ.பி.சி.அணி மாவட்ட தலைவர் அழகேசன், கௌதம் நாகராஜ், யசோதன், புவனேஸ்வரி, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.  கே.பி ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

தமிழக அரசியலில் பாஜக ஒரு புதிய பாதையை உருவாக்கி உள்ளது. இந்த பாதையை பாஜக தலைவர் அண்ணாமலை வழி நடத்தி செல்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு காங்கிரஸ் எம்பி ஒருவர் வீட்டில் பல கோடி ரூபாய் ஊழல் பணம் சிக்கி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு ஊழல்களை செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்து வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த நாட்டை வளர்ச்சி, முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார். இன்றைக்கு சென்னையை புயல் தாக்கி பொதுமக்கள் பல துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால் மாநில திமுக அரசு தாங்கள் நிதி ஒதுக்கியது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காளீஸ்வரன், தண்டபாணி, சந்துரு, ஊடகப் பிரிவு தலைவர் முரளி, துணைத் தலைவர் வாசன் வேலி சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், பெரியநாயகி, சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், மல்லி செல்வம், சந்தோஷ், மகளிர் அணி நிர்வாகிகள் லீமா சிவகுமார், புவனேஸ்வரி, ரேகா, வேளாங்கண்ணி, மோகன்ராஜ் மற்றும் கட்சி தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்