
போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியிலிருந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.